• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒலிபரப்பு கோபுரங்களில் செப்பு கம்பிகளை களவாடியவர் கைது

இலங்கை

மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைபேசி ஒலிபரப்பு கோபுரங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட 457 அடி கம்பிகள் மற்றும் கம்பிகளை உருக்கி பெறப்பட்ட 40 கிலோ தாமிரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply