• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், மாவட்டத்தில் 4 இலட்சத்து 69 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வோர் கையடக்க தொலைபேசிகளை கொண்டுசெல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச்.எம்.சுபியான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Leave a Reply