• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிஹிந்தலை வைத்தியசாலையில் அமைதியின்மை - 11 மாணவர்கள் சுகயீனம்

இலங்கை

மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் தடிமன் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்த 11 சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மிஹிந்தலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றக்கொண்ட சிறுவர்களுக்கே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 சிறுவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 6 முதல் 13 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அமைதியின்மை நிலவக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அங்கு பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, அனுராதபுர மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். மேலும், குறித்த சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்தின் பாவனை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திலீப எஸ். லியனகே தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply