• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன், பிரேத பரிசோதனையில் அவர் மூளை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், மூளைக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply