• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது

இலங்கை

கிளிநொச்சியின் பாரதிபுரம் பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டியதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் முண்டலம, உக்குவெல, துமலசூரிய, பிலியந்தல, யாழ்ப்பாணம், மடம்பே மற்றும் கெசல்வத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 32 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply