• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கை

5 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானியத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திங்களன்று (01) பார்வையிட்டார்.

டித்வா புயலுக்குப் பிந்தைய 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பாரிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைகிறது.

யாழ்ப்பாணத்தையும் காங்கேசன்துறையையும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் போக்குவரத்து இணைப்பான வடக்கு ரயில் பாதை, டித்வா புயலால் கடுமையாகச் சேதமடைந்திருந்தது.

கடந்த ஆண்டு டித்வா புயலின் போது வடக்கு ரயில் பாதையில் உள்ள ஐந்து பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply