ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது
இலங்கை
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணிகளான கலாநிதி குமாரவடிவேல் குருபரன், கனகரத்தினம் சுகாஷ்,
தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சமயத் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.























