வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்
இலங்கை
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவரான மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.






















