• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெப்பமான வானிலை தொடரும் என எச்சரிக்கை

இலங்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும்.

அதிகாலை நேரங்களில் மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் உண்டாகும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்றின் திசை மாறிக்கொண்டே இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. ஆக இருக்கும்.

கடலின் நிலை:

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அமைதியாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக பலத்த காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படலாம்.
 

Leave a Reply