இணையவழி மோசடி - 18 வெளிநாட்டவர்கள் கைது
இலங்கை
இணையவழி மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்புப் பகுதியில் 18 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு தங்குமிட விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (27) பொலிஸார் நடத்திய சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 16 சீன நாட்டினரும், இரண்டு கம்போடியர்களும் அடங்குவர்.
சோதனையின்போது பொலிஸார் கணினி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் அவர்களை ஏப்ரல் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






















