• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளத்தால் தத்தளிக்கும் நியூயார்க் - கனமழைக்கு 2 பேர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்தன. சாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. இதனால் நியூயார்க்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை சந்தித்தன. பேருந்து படிக்கட்டு வாயிலாக உள்ளே தண்ணீர் புகுந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a Reply