• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இந்த மாத தொடக்கம் முதலே மோதல் நீடித்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினருமே நூற்றுக்கணக்கில் எதிா் தரப்பினரைக் கொன்றுவிட்டதாக அறிவித்தனா். பின்னா், கத்தாா், துருக்கி தலையிட்டதன் மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் அவ்வப்போது தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகின்றன.

இந்நிலையில், துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது பதற்றத்தைக் குறைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பேச்சு நடத்தப்பட்டது.

இதற்கிடையே இரு தரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த மோதல்களில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடக்க முயன்ற 25 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave a Reply