• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 2 ,400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply