• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேயிலை தோட்ட கள உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

இலங்கை

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் கள உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் கள உத்தியோகத்தர் ஒருவர் நேற்று மதியம் லெவலன் தோட்டத்தில் உள்ள அவரது விடுதியில் இருக்கும் சந்தரப்பத்தில் புப்புரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவர் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்து இன்று(22) கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு  நடவடிக்கைகள் புப்புரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply