சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது
இலங்கை
இலங்கையில் விடுமுறை நாட்களில் பயணம் செய்த இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுற்றுலா பொலிஸாரிடம் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் முச்சக்கர வண்டி கட்டணமாக தலா ரூ.10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடையவர்கள்.
மேலதிக விசாரணைகளுக்காக முச்சக்கர வண்டி சாரதிகள் கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.























