• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 17 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு கிரேக்க டி-பத்திர முதலீடுகள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 1.8 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிரதிவாதிகள் இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன் முன்னிலையானார்கள்.
 

Leave a Reply