
கனடாவில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
கனடா
கனடாவில் நண்பர்களுடன் சென்ற 19 வயது இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கனடாவில் பிறந்தவர் என்றும், அவரது பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.
Bancroft பகுதியில் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததாகவும் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கியதாக சந்தேகப்பட்டதாகவும் அவசர உதவி குழுவினர் தெரிவித்தனர்.
நீருக்கடியில் தேடிய மீட்பு பிரிவினர் சடலம் ஒன்றை கண்டுபிடித்த நிலையில், அது படகில் சென்ற மூன்றாவது இளைஞன் என்பதை உறுதிப்படுத்தினர்.
அதேவேளை சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞன் உயிர்க்காப்பு அங்கி (life jacket) அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.