
சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை – அரசாங்கம்
இலங்கை
தற்போதைய சூழ்நிலையில் சேவைகள் ஏற்றுமதி வரியை அமுல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வாராந்திர அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறிய அவர், இதற்கு முன்னர் அதிக வரி விதிப்பு முன்மொழியப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
சேவைகள் ஏற்றுமதி வரியை அமல்படுத்தாவிட்டால், மக்கள் இன்னும் கடுமையான வரியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாமல் வரையறுக்கப்பட்ட வரி முறையை அமல்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக நிதியமைச்சகம் ஏதேனும் சலுகை வழங்க முடியுமா என்பதை நாங்கள் பரிசீலிப்போம்.
அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்டம், வெளி தரப்பினருக்கு சேவைகளை வழங்கி அந்நிய செலாவணியை திரும்பக் கொண்டுவரும் இலங்கையில் உள்ள தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு 15 சதவீத சேவை ஏற்றுமதி வரியை 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.