எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதில் நம்பிக்கை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது.
ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வருடம் வாகன இறக்குமதிக்காக 1000 முதல் 1200 மில்லியன் ரூபா வரை வெளிநாட்டு கையிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.பி. ஒருவருக்கு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் ஊடாக வாகனம் வழங்கப்படும்.
அந்த வாகனம் கையிருப்பில் உள்ள வாகனம் எனவும், எம்.பி.யின் பதவிக்காலம் ஐந்து வருடங்களில் முடிவடைந்த பின்னர் குறித்த வாகனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.
























