பைபிளில் மறைத்து வைத்த லாட்டரிக்கு ரூ.8 கோடி பரிசு
அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால் திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அங்குள்ள விர்ஜினீயா பகுதியை சேர்ந்த ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார். அவ்வாறு அவர் புத்தாண்டையொட்டி வாங்கிய டிக்கெட் ஒன்றை வீட்டில் உள்ள தனது பைபிளில் மறைத்து வைத்திருந்தார். அதன்பிறகு வழக்கம் போல் வேலைகளுக்கு சென்று வந்த நிலையில், சமீபத்தில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்பட்டது.
அப்போது தான் அவருக்கு தான் வாங்கிய லாட்டரி டிக்கெட் பற்றி ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக அவர் பைபிளில் மறைத்து வைத்திருந்த லாட்டரியை எடுத்து பார்த்த போது, அவர் வாங்கியிருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஜாக்பாட் பரிசு பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
























