பஸ் உரிமையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை
பதில் பொலிஸ் மா அதிபருடனான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு Clean Sri Lanka போக்குவரத்து நடவடிக்கைக்கு இணங்க 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
மேலும் உரிய கட்கட்டுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் சில வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






















