• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Leave a Reply