• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தரம் ஐந்து பரீட்சை வினாத்தாள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

இலங்கை

இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாள் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்

எவ்வாறாயினும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்குவதற்கு பரீட்சை திணைக்களம் எடுத்த தீர்மானத்தினால் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பெற்றோர்கள் குழுவொன்று இன்று பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply