• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்- சர்வதேச நாணய நிதியம்

இலங்கை

நாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது மக்களினால் தீர்மானிக்கப்பட வேண்டியதொன்று என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை தொடர்பிலான மூன்றாவது மீளாய்வு நடவடிக்கைகள், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னெடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜுலி கொஸாக் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை, வரலாற்றில் எதிர்நோக்கிய மிக மோசமான நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான முயற்சியில் வென்றெடுக்கப்பட்ட விடயங்களை இலங்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு வரையறுக்கப்பட்டதாகவும் அரசாங்கத்திற்கும் கடன் வழங்குனர்களுக்கும்  இடையிலேயே பிரதான இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply