• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரூ.7,500 கோடி மோசடி- இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேருக்கு சிறை தண்டனை

அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ஷா (வயது 38 ), ஷ்ரதா அகர்வால் (38) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பிராட்பர்டி (35) ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1 பில்லியன் டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி ) மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply