• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொன்சேகாவால் எழுதப்பட்ட நுால்  ஜனாதிபதியால் வெளியீடு

இலங்கை

ஜக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வெளியிடப்பட்டது.

இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன் என்ற தலைப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வெளிளிடப்பட்ட புத்தகத்தின் முதல் பிரதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதனையடுத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.

இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில்

நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
 

Leave a Reply