• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்க ஆலோசனை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய சபையில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வன்முறையைக் கட்டுப்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம் என்றும், ஏற்கனவே 3 கட்டத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் தடைகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார்.

அத்துடன், மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதும் குடியேற்றவாசிகளின் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், காஸாவில் பெயரளவில் மட்டுமே போர்நிறுத்தம் நிலவுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.


 

Leave a Reply