• Welcome to TamilsGuide
செய்திகள் 1

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்

இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், இதுவரை களனிப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்த நியமனமானது எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply