அமெரிக்காவில் புதிய உச்சத்தை தொடும் பெற்றோல் விலை - ட்ரம்ப் அரசுக்குக் கடும் நெருக்கடி
அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெற்றோல் விலையால், அந்நாட்டு மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒரு கொள்கலன் (3.8 லீற்றர்) பெற்றோலின் சராசரி விலை 4.39 டொலராக உயர்ந்துள்ளது.
ஈரான் மோதல் தொடங்குவதற்கு முன்பு இந்த விலை 3 டொலருக்கும் குறைவாகவே இருந்தது.
ஈரானுடனான மோதல் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் விலை (பிரென்ட் மசகு எண்ணெய்) 100 டொலரைக் கடந்து, 126 டொலர் வரை உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தெஹ்ரானின் பூர்வாங்க ஒப்பந்த முன்மொழிவை அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இதன் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த எரிசக்தி விலையேற்றம் அமெரிக்காவில் பணவீக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்வடைந்துள்ளது.
ஈரானுடனான மோதல் விவகாரத்தில் தனக்குச் சாதகமான சூழல் இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறி வந்தாலும், இந்த விலை உயர்வு அவருக்குப் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, ஜனாதிபதியின் ஏற்பு விகிதம் (Approval Rating) வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.























