• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்

இலங்கை

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத்தும் நேற்று (22) பிற்பகல் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.

இந்தத் தொலைபேசி உரையாடலில், ஐரிஸ் தேனா போர்க்கப்பல் குழுவினரை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும், போர்க்கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த அன்புக்குரியவர்கள் மற்றும் ஈரானியக் கப்பல்க வீரர்களின் புனிதமான உடல்களைத் தாய்நாட்டிற்குக் கொண்டு செல்லும் பணியில் இலங்கை அளித்த உதவியையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் பாராட்டினார்.

அமெரிக்காவும் சியோனிச ஆட்சியும் ஈரானுக்கு எதிராக இழைத்த குற்றங்களை விவரித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தேனா போர்க்கப்பல் மீதான தாக்குதலை அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட “முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்” என்று விவரித்தார்.

மேலும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனீவா உடன்படிக்கைகளின் அப்பட்டமான மீறலான இந்தக் குற்றத்தை ஈரானிய தேசம் ஒருபோதும் மறக்காது என்றும், இந்தப் போர்க்குற்றத்தைச் செய்தவர்களையும் தளபதிகளையும் பொறுப்பேற்கச் செய்வதற்கும் தண்டிப்பதற்கும் அனைத்து சட்ட மற்றும் அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உரையாடலின்போது ஈரான் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசித்தனர்.
 

Leave a Reply