பொலிஸாருக்கு 7,000 ரூபா கொடுப்பனவு
இலங்கை
பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (18) நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், இந்த கொடுப்பனவு அடுத்த மாதம் வழங்கப்படும் என்றும், இது பொலிஸாருக்கான சீருடைகள், காலணிகளின் செலவை ஈடுகட்டும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நேற்று, பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் சீருடை, காலணிகளுக்கான கொடுப்பனவை வழங்க அமைச்சரவை முடிவு செய்தது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கு ரூ.1,100 மில்லியன் ஒதுக்கப்பட்டு, ஒரு பொலிஸ் அதிகாரிக்கு ரூ.7,000 கொடுப்பனவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையை அடுத்த வாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் – என்றார்.






















