• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்லைப் பிரச்சினை- தாய்லாந்து- கம்போடியா இடையே பயங்கர மோதல்..

தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாய்லாந்து மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த தாய்லாந்து F-16 போர் விமானங்கள் மூலம் கம்போடியா ராணுவத்தை குறிவைத்து குண்டுமழை பொழிந்தது.

தாய்லாந்து, கம்போடியா நாட்டின் எல்லைகள் லாவோஸ் நாட்டின் எல்லையுடன் பிணைந்துள்ளது. இந்த பகுதிக்கு எமரால்டு முக்கோணம் என்று பெயர். இந்த இடத்தில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளது. இந்த எல்லை தொடர்பாக பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது. 15 வருடத்திற்கு முன்னதாக பயங்கரமான ராணுவ மோதல் ஏற்பட்டது, கடந்த மே மாதம் துப்பாக்கிச்சூட்டில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார்.

இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாய்லாந்து F-16 போர் விமானம் மூலம் குண்டு மழை பொழிந்தது.

உபோன் ரட்சதானி மாகாணத்தில் 6 போர் விமானங்கள் குவிக்கப்பட்டு கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குல் நடத்தியது.
 

Leave a Reply