வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட சான்று பொருட்கள் அழிப்பு
இலங்கை
வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்று பொருட்கள், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
குறித்த சான்று பொருட்கள் வவுனியா, மடுகந்த காட்டுப் பகுதியில் இன்று(19) அழிக்கப்பட்டன.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியின் 50 க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய கஞ்சா உள்ளிட்ட பல்வேறு சான்றுப் பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.





















