உள்ளூராட்சி தேர்தலுக்காக வவுனியாவில் வாக்குப்பெட்டிக்கள் அனுப்பிவைப்பு
இலங்கை
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று வவுனியா மாவட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள்,வாக்குச்சீட்டுக்கள், மற்றும் ஏனைய தேவையான அனைத்து ஆவணங்களும் வவுனியா மாவட்டச்செயலகத்தில் இருந்து இன்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டன.
பொலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.























