• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவின் பதிலடிக்கு பயந்து ராணுவத்தைவிட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.

அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா எனவும் கூறப்படுகிறது.
 

Leave a Reply