• Welcome to TamilsGuide
செய்திகள் 1

6 ஆவது முறையாகக் கூடிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான குழு

இலங்கை

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 6 ஆவது முறையாக நேற்று கூடியது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களைக் கொண்ட உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply