
வங்கதேசம் செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு
வங்கதேசத்தில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் (வயது 58) மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்நாட்டில் பாலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து வங்கதேசம் செல்லும் அமெரிக்க பயணிகளை அந்நாட்டு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் IED குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும், அமைதியான கூட்டங்களையும் கூட தவிர்க்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.
ஏனெனில் சிறிய எந்நேரமும் அவை வன்முறையாக மாறக்கூடும். வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பயங்கரவாத வன்முறை அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.