• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தோட்டாக்களும் கூர்மையான ஆயுதமும் மீட்பு

இலங்கை

அத்துருகிரிய பொலிஸார் T56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும் ஒரு கூர்மையான ஆயுதத்தையும் மீட்டுள்ளனர்.

பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடந்த 12 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் 11 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

மேலும் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், இந்த நேரடி வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.

சந்தேக நபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply