• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூட்டத்தில் நடிகை ஸ்ரீலீலாவை இழுத்த நபர்... கண்டுகொள்ளாத நடிகர்

சினிமா

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா, தற்போது இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை அனுராக் பாசு இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேங்டாக் மற்றும் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது.

டார்ஜிலிங்கில் ஸ்ரீலீலா மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் மக்கள் கூடியுள்ள இடத்தின் இடையே நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் ஸ்ரீலீலாவை திடீரென கூட்டத்திற்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்கிறார். இதனால் ஸ்ரீலா பதட்டமடைந்தார். ஆனால் இதை அறியாமல் கார்த்திக் தொடர்ந்து நடந்து செல்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இந்த சம்பவத்தை விமர்சித்து, நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்புக்கு வழங்க வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். 
 

Leave a Reply