
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பல் பல பகுதிகளில் முறைப்பாடுகள் பதிவு
இலங்கை
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், களுத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள அகலவத்தை காவல் நிலையத்திற்கு நேற்று (30) வாய்மொழி மிரட்டல்களுடன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றவியல் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அகலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிகமாக தேர்தல் சட்டங்களை மீறியதாக ஐந்து முறைப்பாடுகள் தீவு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
இலங்கை பொலிஸாரின் கூற்றுப்படி, தலத்துஓயா, தனமல்வில, அளுத்கம, மாத்தளை மற்றும் கலேவெல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.