
ஒரே சிறைச்சாலையில் சாமரவும், வியாழேந்திரனும்
இலங்கை
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் எம் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வசதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.