• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புற்றுநோய் சிகிச்சையால் பக்கவிளைவு - நிகழ்ச்சிகளை ரத்து செய்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சந்திப்புகளை அவர் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், "இன்று காலை புற்றுநோய்க்கான திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து, மன்னருக்கு மருத்துவமனையில் சிறிது நேர கண்காணிப்பு தேவைப்படும் தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்றைய தினம் அவரது மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்க விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து 78 வயதான இங்கிலாந்து அரச தலைவர் கிளாரன்ஸ் ஹவுசில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். மன்னர் வீட்டில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு அவர் மாநில ஆவணங்களில் பணிபுரிந்து வருவதாகவும், அழைப்புகளைச் செய்து கொண்டிருந்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மருத்துவ ஆலோசனையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.
 

Leave a Reply