• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஹரகம அபேக்ஷ வைத்தியசாலையின் இக்கட்டான நிலை

இலங்கை

மஹரகம அபேக்ஷ வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட 05 இயந்திரங்களில் மூன்று பழுதடைந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளாந்தம் சுமார் 250 நோயாளர்களின் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட விடயங்களை மீளமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply