
2025 இல் இலங்கையின் ஏற்றுமதி வலுவான ஆரம்பத்தில்
இலங்கை
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.334 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆண்டின் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் குறிக்கிறது.
அதேநேரம் இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10.3% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
ஜனவரி 2025 இல் பொருட்கள் ஏற்றுமதி செயல்திறன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இருந்தது, இது ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 3.51% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிக்கின்றது.
ஆடை மற்றும் ஜவுளி, தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், வைரங்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், மசாலா பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியின் வருவாய் அதிகரிப்பால் பொருட்கள் ஏற்றுமதியின் அதிகரிப்பு முதன்மையாக உந்தப்பட்டது.
இதற்கிடையில், 2025 ஜனவரி மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதிகள் 329.37 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37.87% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
இலங்கையின் சிறந்த 15 ஏற்றுமதி சந்தைகளில், அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் அனைத்தும் இந்த மாதத்தில் சாதகமான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.