• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

இலங்கை

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களுடன் கிளிநொச்சி நோக்கி பயணித்த பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தலைக்கவசம் அணியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக

சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் கௌதமன் எனும் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply