• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியின் திட்டங்கள் வரவேற்கத்தக்கது – காஞ்சன விஜேசேகர

இலங்கை

உர மானியம் அதிகரிப்பு உட்பட பல அரசாங்க முயற்சிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புத்துயிர் பெற்ற கொள்கைகளில் உர மானியத்தை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிப்பது, மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை அறிமுகப்படுத்துவது போன்ற விடயங்கள் அடங்குமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கீழ் இந்த திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  விஜேசேகர தெரிவித்தார்.

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டதாக விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply