• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஊழல் மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு கொரியா ஒத்துழைப்பு

இலங்கை

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கும் இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee), பிரதி தூதுவர் சோன்கய் ஜியோங் (Songyi Jeong), KOICA இன் பணிப்பாளர் யுன்க்‌ஜின் கிம் (Myungjin Kim), பிரதி பணிப்பாளர்களான யோன்க்வன் கிம் (Yongwhan Kim), யுன்சூ ஜியோன் ( Yunsoo Jeon), DIMO வின் நிறைவேற்று அதிகாரி ரொஷான் சமரசிங்க மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தின் பிரதி நிறைவேற்று அதிகாரி பீ.எம்.யூ.எஸ்.பன்னஹெக்க உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply