இரண்டு நாட்களுக்கு முன் கொலை முயற்சி - மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப்
துப்பாக்கிச்சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இரண்டாவது முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட இருந்தது பற்றி பேசிய டிரம்ப்,
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
நேற்று முன்தினம் (15-09-2024) டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.