• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆசிரியர்களைக் கண்டித்த ஜனாதிபதி

இலங்கை

பாடசாலைக் கல்விக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடையறு விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆசிரியர்கள்  ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த விடயத்தில் தான் கடுமையாக நடந்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடம் ஆசிரியர்களுக்கு இருமுறை 10,000 ரூபாய்  உதவித்தொகை வழங்கியபோதும் அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி  கவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply