• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு

இலங்கை

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரி, சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று இன்று (25) பொதுமக்களின் கையொப்பங்களுடன் கூடிய மனுவை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஐஷ்சர்யா குணரத்ன அடிகாரி, சர்வதேச அழுத்தம் காரணமாக சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் உத்தரவை நீட்டிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply